ராய்டாக் ஆறு
பங்களாதேஷில் ஒரு நதி / From Wikipedia, the free encyclopedia
ராய்டாக் ஆறு (Raidak Rive) பிரம்பபுத்திரா நதியின் கிளை ஆறு ஆகும். இது இந்தியா, பூட்டான் மற்றும் வங்காளதேசம் வழியாகச் செல்கிறது. இது இமயமலையில் உற்பத்தியாகிறது. இதன் இன்னொரு பெயர் வாங் சூ ஆகும். பூட்டனில் இது திம்பு சூ எனவும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தில் ஜால்பாய்குரி மற்றும் கூச் பேகர் மாவட்டம் வழியாக வங்காளதேசம் செல்கிறது. வங்காளதேசத்தில் குரிகிராம் மாவட்டதின் வழியாக செல்லும் இந்த ஆற்றை தூத்குமார் ஆறு என்று அழைக்கின்றனர்.[1][2][3][4] [5]இந்த ஆறானது மொத்தம் 370 (230 மைல்கள்) கிலோமீட்டர் தூரம் ஓடுகின்றது.[6]