யோகான் தோபியாசு மேயர்
From Wikipedia, the free encyclopedia
யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) (5 மே 1752 – 30 நவம்பர் 1830) ஒரு செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் கணிதவியல், இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் செருமன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல், செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகின. இவரது தந்தையாரான தோபியாசு மேயருடன் இவரைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
விரைவான உண்மைகள் யோகான் தோபியாசு மேயர் Johann Tobias Mayer, பிறப்பு ...
மூடு