யமன் (இந்து மதம்)
From Wikipedia, the free encyclopedia
யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் குறித்த தகவல்கள் வேதங்களில் காணப்படுகின்றன. இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். யமன் இந்தோ-இரானிய புராணக்கதைகளை ஒட்டி எழுந்த ஒரு தெய்வம் ஆவார். வேதத்தின்படி, யமன் பூமியில் இறந்த முதல் மனிதர் ஆவார். தன்னுடைய அளவற்ற புண்ணியத்தின் காரணமாக இவர் இறப்பின் பின் உயிர்கள் கொண்டு செல்வதாகச் சொல்லப்படும் உலகத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்டார்.
யமன் | |
---|---|
அதிபதி | இறப்பு |
வகை | தேவர்கள் |
இடம் | நரகம் |
கிரகம் | புளூட்டோ |
ஆயுதம் | தண்டம், பாசக்கயிறு |
துணை | யமி அல்லது சியாமளா அல்லது ஐய்யோ தேவி |
யமனுக்குச் சித்திரகுப்தர் உதவி செய்கிறார். இவரே மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைச் சரி பார்த்து அவற்றைக் குறித்துக் கொண்டு, அந்தத் தகவல்களை யமனுக்குத் தெரிவிக்கிறார். இந்தக் கணக்கின்படியே, மனிதர்களை நரகத்துக்கு அனுப்புவதா அல்லது சொர்க்கத்துக்கு அனுப்புவதா என முடிவெடுக்கப்படுகிறது. யமனைத் தர்மத்தின் தலைவனாகக் கருதி, இவரை யம தர்ம ராஜா எனவும் அழைப்பதுண்டு. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக யமன் கருதப்படுகிறார்