மொரார்ஜி தேசாய்
இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர் / From Wikipedia, the free encyclopedia
மொரார்சி ரன்சோதிசி தேசாய் (29 பிப்ரவரி 1896 - 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்து வெளியேறி பின்பு காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலையும், பல அதிகார மீறல் செயல்களையும், அவர் அப்போது கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்கட்சியான ஜனதா கட்சியில் பிரதமர் ஆனார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
விரைவான உண்மைகள் மொரார்சி தேசாய், 5வது இந்தியப் பிரதமர் ...
மொரார்சி தேசாய் | |
---|---|
5வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் மார்ச் 24, 1977 – ஜூலை 15, 1979 | |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | சரண் சிங் |
2வது இந்திய துணைப் பிரதமர் | |
பதவியில் 13 மார்ச் 1967 – 16 ஜூலை 1969 | |
முன்னையவர் | சர்தார் வல்லபாய் படேல் |
பின்னவர் | சரண் சிங், ஜெகசீவன்ராம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிப்ரவரி 29, 1896 பாதிலி, மும்பை |
இறப்பு | ஏப்ரல் 10, 1995 |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி (1977-1988) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
மூடு