மொகித் சர்மா
From Wikipedia, the free encyclopedia
மேஜர் மொகித் சர்மா (Major Mohit Sharma)(AC|SM)[2] (பிறப்பு:13 சனவரி 1978 – 21 மார்ச் 2009) இந்தியத் தரைப்படையின் வான் குடைச் சிறப்புப் படையின் அதிகாரியான மேஜர் ஆவார். இவரது வீரதீர பணியைப் பாராட்டி, இறப்பிற்குப் பின் இவருக்கு அமைதிக் காலத்திய மிக உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கர விருது வழங்கப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் மேஜர்மொகித் சர்மா அசோக சக்கரம், சேனா பதக்கம், பிறப்பு ...
மேஜர் மொகித் சர்மா | |
---|---|
மேஜர் மொகித் சர்மா | |
பிறப்பு | (1978-01-13)13 சனவரி 1978 ரோத்தக், அரியானா, இந்தியா |
இறப்பு | 21 மார்ச்சு 2009(2009-03-21) (அகவை 31) ஹப்ருதா காடு, குப்வாரா மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
சார்பு | இந்தியா |
சேவை/ | பாரசூட் சிறப்புப் படைகள் |
சேவைக்காலம் | 1999–2009 |
தரம் | மேஜர் |
தொடரிலக்கம் | IC-59066[1] |
படைப்பிரிவு | பாரசூட் சிறப்புப் படைகள் |
விருதுகள் | |
கல்வி | தேசிய பாதுகாப்பு அகாதமி இந்திய இராணுவ அகாதமி |
துணை(கள்) | மேஜர் ரிஷ்மா சரீன் |
மூடு
21 மார்ச் 2009 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவ்ட்டத்தின் பாக்கித்தான் எல்லையை ஒட்டிய ஹப்ருதா காட்டில் பா க்கித்தான் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிடும் போது, நான்கு பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்.[4] இவர் தேசிய பாதுகாப்பு அகாதமி மற்றும் இந்திய இராணுவ அகாதமியில் இராணுவப் பயிற்சி பயின்றவர். 2005-ல் இவர் சேனா பதக்கம் பெற்றவர்.[3][5][6][7]