மேற்கு சமயப்பிளவு
கத்தோலிக்கப் பிரிவில் நடந்த சமயப் பிளவு / From Wikipedia, the free encyclopedia
மேற்கு சமயப்பிளவு அல்லது திருப்பீட பிளவு என்பது கத்தோலிக்க திருச்சபையில் 1378 முதல் 1418 வரை நிகழ்ந்த பிளவைக்குறிக்கும். இக்காலத்தில பல நபர்கள் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை என உரிமை கொண்டாடினர். இச்சிக்கல் இறையியல் அல்லாமல் அரசியல் சார்ந்த ஒன்றாகவே இருப்பினும் இது திருத்தந்தை பதவியின் மரியாதையினை பெருமளவு குறைத்தது. இப்பிளவு காண்ஸ்டன்சு பொதுச்சங்கத்தினால் (1414–1418) முடிவுக்கு வந்தது. பெரும் சமயப்பிளவு என்றும் சில இடங்களில் அழைக்கப்படும் இது பெரும்பாலும் 1054இன் பிளவைக் குறிக்கவே பயன்படுகின்றது.