முப்பெரும் தேவியர்கள்
லட்சுமி, பார்வதி, சரசுவதி ஆகிய மூன்று தேவிகள் பற்றியது / From Wikipedia, the free encyclopedia
முப்பெரும் தேவியர் என்பது இந்து சமயத்தில் மூன்று பெண் கடவுள்களைக் குறிப்பதாகும். இது திருமூர்த்திகளுக்கு இணையான பெண் வடிவம் ஆகும். இந்து மாதத்தில் முப்பெரும் தேவியர் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆவர். இவர்களை கலைமகள்/இயன்மகள்/சொன்மகள், அலைமகள்/திருமகள்/மலர்மகள், மலைமகள்/உமையவள்/இகன்மகள் என்றும் தமிழில் கூறுவதுண்டு. சாக்தம் சமயத்தில் யோகமயா எனும் கடவுளின் வேறு வடிவங்கள் தான் முப்பெரும் தேவியர். ஆதி பராசக்தி, தேவி என்றும் யோகமயாவை அழைப்பர்.[1][2][3]