முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (First Anglo-Burmese War) (5 மார்ச் 1824 – 24 பிப்ரவரி 1826), பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே 1824 -26-களில் நடைபெற்ற முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் ஆகும். இப்போர் 1 ஆண்டு, 11 மாதங்கள் மற்றும் 19 நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் வென்றதால், யாந்தபு உடன்படிக்கையின் படி, பர்மிய அரசு, அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், அரக்கான், கச்சர் மற்றும் ஜெயந்தியா இராச்சியத்தின் மலைப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்ததுடன், போர் ஈட்டுத் தொகையாக ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு செலுத்தியது.[1][2]
முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ரங்கூன் கோட்டையை ஆங்கிலேயர்கள் தாக்குதல், 8 சூலை 1824 |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியப் பேரரசு | கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சர் ஆர்ச்சிபால்டு காம்பெல் ஜோசப் வாண்டன் மோரிசன் | மகா பந்துலா † மகா நீ மியோ † மிங்க்யா செயா துரா |
||||||||
பலம் | |||||||||
50,000 | 40,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
15,000 | அறியப்படவில்லை எனினும் ஆங்கிலேயரை விட பர்மியரகளுக்கு உயரிழப்பு கூடுதல். |
தற்கால வடகிழக்கு இந்தியப் பகுதிகளை, ஆங்கிலேயர்கள் கைப்பற்ற பர்மிய அரசுடன் இப்போர் நடைபெற்றது.
முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில் பதினைந்தாயிரம் ஐரோப்பிய மற்றும் பர்மியப் படைவீரர்கள் உயிர் இழந்தனர். போரின் நடுவில் சிக்கிய பர்மியக் குடிமக்கள் பலர் இறந்தனர். இப்போரினால் பிரித்தானியப் பேரரசுக்கு 5 முதல் 13 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.[3] இப்பெருந்தொகை இழப்பினால், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிலை சீர் கெட்டது.[4]
இப்போர் பர்மிய இராச்சியத்தின் தோல்வியுடன் முடிந்ததால், பர்மாவின் தன்னாட்சி உரிமையின் முடிவிற்கு வித்திட்டது. இப்போரின் முடிவால், சிறிது காலத்திற்கு பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில், பர்மியப் பேரரசின் அச்சுறுத்தல்கள் அகன்றது.[3] முதலாம் ஆங்கிலேய - பர்மியப் போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்களுக்கு, பர்மியப் பேரரசு பெரும் போர் ஈட்டுத் தொகை வழங்கியதால், பர்மாவின் பொருளாதாரம் சீர் கெட்டது.[2] முதல் ஆங்கிலேய - பர்மியப் போரைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள், 1852 - 1853 மற்றும் 1885 - 1886 ஆண்டுகளில் இரு முறை நடைபெற்ற பர்மியர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெற்றதால், 1886ல் பர்மாவில் பிரித்தானிய ஆட்சி மலர்ந்தது.