மாரியம்மன் கோயில், மேடான், வடக்கு சுமத்ரா
இந்தோனேசியாவின், வடக்கு சுமத்ராவில் உள்ள கோயில். / From Wikipedia, the free encyclopedia
மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple, Medan) என்பது இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா மேடானில் உள்ள பழமையான இந்து கோயில் ஆகும். இந்த கோயில் மாரியம்மன் வழிபாட்டிற்காக 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது [1] கம்பூங் மெட்ராஸ் அல்லது மேடானின் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து மதக் கடவுள்களுக்கான கோயிலாகும். திராவிடக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கோயிலில் மாரியம்மனின் குழந்தைகளான விநாயகர், மற்றும் முருகன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்தக் கோயிலின் நுழைவாயில் பல தளங்களைக் கொண்டு அமைந்த கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கோபுரம் என்ற அமைப்பானது பொதுவாக தென்னிந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களின் வாயிலில் காணப்படுகின்ற அமைப்பாகும். கோயில் பொது வழிபாட்டாளர்கள் தைப்பூசம் மற்றும் தீபாவளி போன்ற திருவிழா நாட்களில் சந்திக்கும் இடமாக உள்ளது