மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம்
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த கம்யூனிச இராணுவம் / From Wikipedia, the free encyclopedia
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் (ஆங்கிலம்: Malayan Peoples' Anti-Japanese Army (MPAJA); மலாய்: Tentera Anti-Jepun Penduduk Tanah Melayu; சீனம்: 馬來亞人民抗日軍) என்பது 1941-ஆம் ஆண்டு தொடங்கி 1945-ஆம் ஆண்டு வரை மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பை (Japanese occupation of Malaya) எதிர்த்த பொதுவுடைமை இராணுவம் (Communist Guerrilla Army) ஆகும். சப்பானியர்கள் மலாயாவில் ஆதிக்கம் செலுத்திய நான்கு ஆண்டுகளுக்கும்; இந்த இராணுவம் மலாயாவில் இயங்கி வந்தது.
மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவம் Malayan Peoples' Anti-Japanese Army | |
---|---|
Tentera Anti-Jepun Penduduk Tanah Melayu 馬來亞人民抗日軍 | |
தலைவர்கள் | லாய் தெக், சின் பெங் |
செயல்பாட்டுக் காலம் | திசம்பர் 1941 (1941-12) – திசம்பர் 1945 (1945-12) |
பின் வந்தவை | மலாயா தேசிய விடுதலை இராணுவம் |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | சப்பானிய ஆட்சியில் மலாயா & சிங்கப்பூர் |
சித்தாந்தம் | |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
அளவு | ~6,500 - 10,000 (கணிப்பு) |
கூட்டாளிகள் | ஐக்கிய இராச்சியம் (சப்பானிய ஆக்கிரமிப்பு) |
எதிரிகள் |
|
யுத்தங்கள் மற்றும் போர்கள் | இரண்டாம் உலகப்போர்
|
இந்த இராணுவம் சீனர் இனத்தைச் சேர்ந்த போராளிகளை அதிகமாகக் கொண்டு இருந்தது. அத்துடன் மலாயா வரலாற்றில் மிகப்பெரிய சப்பானிய எதிர்ப்புக் குழுவாகவும் (Anti-Japanese Resistance Group in Malaya) அறியப்படுகிறது.
மலாயா மீது சப்பானிய படையெடுப்பின் போது அந்தச் சப்பானிய ஆக்கிரமைப்பை எதிர்ப்பதற்காக, பல்வேறு சிறிய குழுக்களும், மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமும் (MPAJA) ஒன்றிணைந்தன. இந்தக் கூட்டு முயற்சி அப்போதைய பிரித்தானிய மலாயா காலனித்துவ அரசாங்கத்தின் (British Colonial Government) ஒருங்கிணைந்த முயற்சியாகும். அந்த வகையில்தான் மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவமும் (MPAJA) உருவானது.