மரியா கிறிஸ்தவர்களின் சகாய அன்னை
From Wikipedia, the free encyclopedia
மரியா, கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (இலத்தீன்: Sancta Maria Auxiliatricis Christianorum) என்பது கத்தோலிக்க திருச்சபையால் தூய கன்னி மரியாவுக்கு வழங்கப்படும் ஒரு பட்டமாகும். மரியாவுக்கான பக்தி வணக்கத்தை அடிப்டையாகக் கொண்டு கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் மே மாதம் 24 ஆம் நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கத்தோலிக்க புனிதர் யோவான் கிறிசோஸ்தோம் 345 ஆம் ஆண்டில் மரியாவுக்கான இந்த பட்டத்தை முதல்முதலில் பயன்படுத்தினார். புனித டான் போஸ்கோ மற்றும் மரியா டொமெனிக்கா மஸாரெல்லோ இருவரும் அதே பரிவு மற்றும் பக்தியை பரப்பினர்.
திருத்தந்தை ஐந்தாம் பயஸ் 1571 ஆம் ஆண்டில் புனித லீக்கின் கிறிஸ்தவ இராணுவத்தை அழைத்தார். கிறிஸ்தவ ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இருந்த ஓட்டமன் பேரரசின் விரிவாக்க நோக்கம் தோற்கடிக்கப்பட்டதின் வெற்றி பெற்றதன் காரணம், இந்த பக்தியின் கீழ் மரியன்னையின் பரிந்துரைக்கு அர்பணிக்கப்பட்டது.
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1870 ஜூலை 15 அன்று பசிலிக் நோட்ரே-டேம் டி போன்செகோர்ஸ் பேராலயத்தில் பொறிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய மரியன்னை சிலைக்கு திருத்தந்தையின் முடிசூட்டு விழாவின் முதல் ஆணையை வழங்கினார். ருவான் நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் ஹென்றி-மேரி-கஸ்டான் போய்ஸ்னோர்மண்ட் டி பொன்னே 1880 மே 24 அன்று முடிசூட்டுச் சடங்கை நிறைவேற்றினார்.
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ 1903 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 அன்று துரின் படத்திற்கு முடிசூட்டு விழாவின் திருத்தந்தையின் முடிசூட்டு ஆணையில் கையெழுத்திட்டு வழங்கினார். முடிசூட்டு விழா 1903 ஆம் ஆண்டு மே 17 அன்று துரின் முன்னாள் பேராயர் கார்டினல் அகோஸ்தீனோ ரிச்செல்மி அவர்களால் நிறைவேற்றப்பட்டது. திருத்தந்தை பத்தாம் பயஸ் 1911 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று திருத்தந்தையின் ஆணை அன்னோ ரெபராத்தே சல்யூடிஸ் (Anno Reparatæ Salutis) மூலம் இந்த பக்தி வணக்கத்தின் பெயர் கொண்ட இவ்வாலயத்தை சிறு பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தினார்.
இந்த பட்டத்தை இங்கிலாந்து திருச்சபையை சேர்ந்த மேரி சங்கமும் (ஆங்கிலிகன்) வணங்குகிறது.