மரம் (கட்டிடப் பொருள்)
From Wikipedia, the free encyclopedia
பெரிய, பல்லாண்டுத் தாவர வகைகளுள் ஒரு வகை மரம் எனப்படுகிறது. முதிர்ந்த மரங்கள் குற்றிகளாகவோ (logs), அறுக்கப்பட்டுப் பலகைகள், அல்லது வேறு வடிவிலோ மிகப் பழங்காலம் முதலே கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்களை உருவாக்குவதற்காகப் பயன்பட்டு வருகின்றன. உயிருடனிருக்கும் மரவகையைச் சேர்ந்த தாவரத்தைக் குறிக்கவும், வெட்டப்பட்டுக் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காகத் தயார் செய்யப்பட்ட கட்டிடப் பொருளைக் குறிக்கவும், மரம் என்ற ஒரே சொல்லே வழக்கில் உள்ளது. மரம் (கட்டிடப் பொருள்) எனும் இக் கட்டுரை, மரத்தைக் கட்டிடப் பொருளாக எடுத்து விளக்குகிறது.