மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம்
இந்தியாவின் மங்களூருவில் உள்ள வானூர்தி நிலையம் / From Wikipedia, the free encyclopedia
மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mangalore Airport, (ஐஏடிஏ: IXE, ஐசிஏஓ: VOML)), கருநாடக மாநிலத்தின் மங்களூரு நகரத்திற்கான பன்னாட்டு வானூர்தி நிலையம்[2] ஆகும். இது கருநாடகத்தின் இரண்டே பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்; மற்றது பெங்களூருவின் கெம்பகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். தவிரவும் இது கருநாடகத்தின் இரண்டாவது நெருக்கடிமிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. உள்நாட்டுப் பறப்புகளைத் தவிர மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதன்மை நகரங்களுக்கு தினமும் வானூர்திகள் செல்கின்றன. திசம்பர் 25, 1951இல் திறக்கப்பட்டது; அப்போது இது பாஜ்பே விமான நிலையம் என அழைக்கப்பட்டது.[3] அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு DC-3 டகோட்டா வானூர்தியில் வந்திறங்கி துவங்கி வைத்தார்.[3][4]
விரைவான உண்மைகள் மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பயணிகள் முனையத்தின் வான்காட்சி | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
உரிமையாளர்/இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | மங்களூர் (மங்களாபுரம்) | ||||||||||||||
அமைவிடம் | பாஜ்பே, கருநாடகம், இந்தியா | ||||||||||||||
உயரம் AMSL | 103 m / 337 ft | ||||||||||||||
ஆள்கூறுகள் | 12°57′41″N 074°53′24″E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2016-17) | |||||||||||||||
| |||||||||||||||
மூடு