மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
கணக்கெடுப்பு (census) என்று குறிப்பிட்ட சமயத்தில் ஒரு நாட்டின் தொகுப்பு ஒன்றிலுள்ள ஒவ்வொருவரையும் குறித்த தரவுகளை பெறுவதுக் குறிப்பிடப்படுகிறது.[1][2] பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பைக் குறித்தாலும் விலங்குகள், வாகனங்கள் போன்ற தொகுப்புகளின் தரவுகளைப் பெறுதலும் உள்ளிட்டது. ஐக்கிய நாடுகள் வரையறைப்படி மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் " தனித்துவ கணக்கெடுப்பாக, வரையறுக்கப்பட்ட பகுதியில் அனைவருக்கும் பொதுவானதாக, ஒரே நேரத்தில் மற்றும் வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில்" இருக்க வேண்டும்.மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது.[3] ஆங்கிலச் சொல்லான சென்சஸ் என்பது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. உரோமைப் பேரரசு காலத்தில் இராணுவ சேவைக்காக உடற்தகுதி பெற்ற அனைத்து ஆண்களைக் குறித்தப் பட்டியல் திரட்டப்பட்டது.
கணக்கெடுப்பு, ஓர் தொகையின் தெரிவுசெய்த பகுதியிலிருந்து தரவுகள் பெறப்படும் கூறிடலிலிருந்து வேறுபட்டது. சிலநேரங்களில் கணக்கெடுப்பின் இடைக்காலங்களில் கூறிடல் முறையில் தரவுகள் பெறப்படுவது உண்டு.
கணக்கெடுப்பு திட்டமிடுபவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வணிகங்கள் (சந்தைப்படுத்தல்), சமூகவியலாளர்கள் போன்றோருக்குப் பயனுள்ளதாக அமைகிறது. நாட்டு வளர்ச்சிக்கான திட்டப்பணிகளை வடிவமைக்கவும் மக்களாட்சித் தொகுதிகளை வெவ்வேறு நிலைகளில் தீர்மானிக்கவும் இவை பயனாகின்றன.