மகளிர் ஆஷஸ்
From Wikipedia, the free encyclopedia
மகளிர் ஆஷஸ் என்பது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடக்கும் துடுப்பாட்ட தொடருக்கான பெயர். ஆண்கள் துடுப்பாட்டத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடரை முன்மாதிரியாகக் கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டது. 2013 வரை, தேர்வு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் தொடரின் வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டார்கள்.
விரைவான உண்மைகள் நாடு(கள்), நிர்வாகி(கள்) ...
நாடு(கள்) | ஆத்திரேலியா இங்கிலாந்து |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
வடிவம் | தேர்வு, ஒருநாள் மற்றும் இ20 என அனைத்து வகைகளும் கலந்து. புள்ளிகள் அடிப்படையிலான தொடர் |
முதல் பதிப்பு | 1934–35 |
கடைசிப் பதிப்பு | 2023 |
தற்போதைய வாகையாளர் | ஆத்திரேலியா |
அதிகமுறை வெற்றிகள் | ஆத்திரேலியா (9 முறை ) |
அதிகபட்ச ஓட்டங்கள் | எலிஸ் பெர்ரி (1552) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | எலிஸ் பெர்ரி (68) |
மூடு
2013 மகளிர் ஆஷஸ் தொடரிலிருந்து தேர்வு, ஒரு நாள் மற்றும் இ20ப என அனைத்து வகையான போட்டிகளின் முடிவுகளை வைத்து புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கும் முறை உருவானது. தேர்வு போட்டியில் வெல்லும் அணிக்கு 4 புள்ளிகளும், ஒரு நாள் மற்றும் இ20 போட்டிகளில் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். தேர்வு போட்டி சமனாகும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.[1]