போர்த்துக்கீசிய மலாக்கா
1511-ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரையில் மலேசியா மலாக்காவில் போர்த்துகீசியர் ஆட்சி / From Wikipedia, the free encyclopedia
போர்த்துக்கீசிய மலாக்கா, (மலாய் மொழி: Melaka Portugis; போர்த்துகீசியம்: Malaca Portuguesa அல்லது Fortaleza de Malaca; ஆங்கிலம்: Portuguese Malacca; சீனம்: 葡属马六甲) என்பது 1511-ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரையில், 130 ஆண்டுகள், தீபகற்ப மலேசியாவின் மலாக்கா நகரை போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்ததைக் குறிப்பிடுவதாகும்.
Portuguese Malacca | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1511–1641 | |||||||||
நிலை | காலனி | ||||||||
தலைநகரம் | மலாக்கா | ||||||||
பேசப்படும் மொழிகள் | போர்த்துகீசியம், மலாய் | ||||||||
போர்த்துகீசிய மன்னர் | |||||||||
• 1511–1521 | மானுவல் I Manuel I | ||||||||
• 1640 – 1641 | ஜான் IV John IV | ||||||||
தளபதிகள் Captains-major | |||||||||
• 1512–1514 (முதல் தளபதி) | ரூய் டி பிரிட்டோ பாடலிம் Manuel de Sousa Coutinho | ||||||||
• 1638–1641 (கடைசி தளபதி) | மானுவல் டி சூசா குடின்கோ Manuel de Sousa Coutinho | ||||||||
தளபதிகள் Captains-general | |||||||||
• 1616–1635 (முதல் தளபதி) | அந்தோனியோ பிந்தோ டா பொன்சேகா António Pinto da Fonseca | ||||||||
• 1637–1641 (கடைசி தளபதி) | லூயிஸ் மார்டின் டி சூசா Luís Martins de Sousa | ||||||||
வரலாற்று சகாப்தம் | Age of Imperialism | ||||||||
• மலாக்கா சுல்தானகத்தின் வீழ்ச்சி | 15 ஆகஸ்டு 1511 | ||||||||
• டச்சு படையெடுப்பு | 14 சனவரி 1641 | ||||||||
நாணயம் | போர்த்துகீசிய ரியால் | ||||||||
|
1511 ஆகஸ்டு 15-ஆம் தேதி, போர்த்துகீசியர்களின் தாக்குதலால் மலாக்கா சுல்தானகம் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர், மலாக்கா சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மகமுட் ஷா (Mahmud Shah of Malacca), போர்த்துகீசியர்கள் மீது அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வந்தார்.
சுல்தான் மகமுட் ஷாவின் தாக்குதல்களைத் தவிர்க்க, போர்த்துகீசியத் தளபதி அபோன்சோ டி அல்புகெர்க், மலாக்காவில் ஒரு கோட்டையைக் கட்டினார். அந்தக் கோட்டையின் பெயர் ஆ பாமோசா (Fortaleza de Malaca). அதன் பின்னர் மலாக்கா நகரம், போர்த்துகல் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
போர்த்துகீசியர்கள் மலாக்காவை 130 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். 1641-ஆம் ஆண்டு மலாக்கா நகரத்தை டச்சுக்காரர்கள் (Dutch East India Company) கைப்பற்றிக் கொண்டார்கள்.