பேறுபெற்றோர்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவத்தில் பேறுபெற்றோர் என்பது மத்தேயு நற்செய்தியில் உள்ள மலைப்பொழிவில் இடம் பெரும் எட்டு வகையான பேறுகளை பெறுவோரை குறிக்கும். இவற்றுள் நான்கு பேறுகள் லூக்கா நற்செய்தியில் உள்ள சமவெளிப் பொழிவிலும் இடம் பெறுகின்றன. மீதம் உள்ள நான்கு ஆசிகளும், இன் நற்செய்தியில் பரிசேயருக்கான சாபங்களாக இடம்பெறுகின்றன.
ஆக்ஸ்போர்டு கிறித்தவ திருச்சபைகளுக்கான அகராதியின் படி (The Oxford dictionary of the Christian church), லூக்கா நற்செய்தியில் உள்ள பேறுகள் வெளிபடையான துன்பங்களை படுவோருக்கு கிடைக்கும் பேறுகளாகவும், மத்தேயு நற்செய்தியில் உள்ளவை ஆன்மீக துன்பங்களுக்கான பேறுகளையும் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.[1]