பேரூர் பட்டீசுவரர் கோயில்
கோயில் / From Wikipedia, the free encyclopedia
பேரூர் பட்டீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும்.[1] திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
திருப்புகழ், தேவாரம் பாடல் பெற்ற பேரூர் பட்டீசுவரர் கோயில் | |
---|---|
கோயில் நுழைவாயில் விமானம் | |
புவியியல் ஆள்கூற்று: | 10.97°N 76.91°E / 10.97; 76.91 |
பெயர் | |
பெயர்: | பேரூர் பட்டீசுவரர் கோயில் |
ஆங்கிலம்: | Perur Pateeswarar Temple |
அமைவிடம் | |
ஊர்: | பேரூர் |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பட்டீசுவரர் |
தாயார்: | பச்சைநாயகி |
தல விருட்சம்: | பிறவாப்புளி மற்றும் இறவாப்பனை |
தீர்த்தம்: | தெப்பக்குளம் |
சிறப்பு திருவிழாக்கள்: | நாற்று நடவுத் திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | திருப்புகழ், தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர், சமபந்தர், அப்பர், அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழர் கட்டடக்கலை |
கல்வெட்டுகள்: | உண்டு |
வரலாறு | |
தொன்மை: | சுமார் 1800 ஆண்டுகள் |
கட்டப்பட்ட நாள்: | பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | கரிகால் சோழன் |
வலைதளம்: | http://www.perurpatteeswarar.tnhrce.in/ |
இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.[2]