பெருநகர சென்னை மாநகராட்சி
இந்தியாவின் தமிழ்நாட்டின், 21 மாநகராட்சிகளில், தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது / From Wikipedia, the free encyclopedia
பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சி ஆகும். 1688 செப்டம்பர் 29 அன்று இது உருவாக்கப்பட்டது.[1] இதன் பட்டயம் (தனியுரிமை சாசனம்) 1687 டிசம்பர் 30-இல்[1] கிழக்கு இந்திய கம்பெனியரால் எற்படுத்தப்பட்ட, புனித ஜார்ஜ் கோட்டை நகராட்சி மற்றும் ஏனைய பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 10 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயல்பட்டது.[1] சென்னை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயல்பட்டது. சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 1875 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிகளில் வரி வருவாயில் முதலிடத்தைக் கொண்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 29 செப்டம்பர் 1688 (335 ஆண்டுகள் முன்னர்) (1688-09-29) |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | |
ஆணையாளர் | ஜெ.இராதாகிருஷ்ணன்இ.ஆ.ப |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 200 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (178)
எதிர்கட்சிகள் (22)
|
கூடும் இடம் | |
ரிப்பன் கட்டிடம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |
வலைத்தளம் | |
chennaicorporation |
இம் மாநகராட்சி நகர வரிகள் வசூலிக்க 1972[1] ல் நாடாளுமன்றச் சட்ட செயல் இயற்றப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டது அது மட்டுமில்லாமல் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் அதிகாரங்களையும் வழங்கியது. அதன் மக்கள்த் தொகைக்கு ஏற்ப அதன் நிர்வாக அமைப்பை மாற்றிக் கொள்ள அச்சட்டம் வழிவகை செய்தது. மதராஸ் நகராட்சி (திருத்தம்) சட்ட செயல் 1919[1] உரிமையளித்துள்ளதின்படி அதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைவுகளை மாற்றியமைக்க முடியும்.