பெங்களூர் நாகரத்தினம்மா
From Wikipedia, the free encyclopedia
பெங்களூர் நாகரத்தினம்மா (Bangalore Nagarathnamma) (பிறப்பு: 1878 நவம்பர் 3 – இறப்பு: 1952 மே 19) [1] புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராக திகழ்ந்தவர். [2] தேவரடியார் மரபில் [3] வந்த இவர் கலை வளர்ச்சிக்குதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். [4] ஆண் ஆதிக்கம் செலுத்தும் திருவிழாவிற்குள், பெண் கலைஞர்களுக்கு அதில் பங்கேற்க சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அளவுக்கு பெண்ணிய ஆக்கிரமிப்பாளராக இருந்தார். மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்துள்ளார். மேலும், இவர் கவிதை மற்றும் புராணக்கதைகள் பற்றிய புத்தகங்களையும் திருத்தி வெளியிட்டார். [3]
திருவையாற்றில் தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். [4] தியாகராசர் ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். [5]. முத்துப்பழனி என்ற பெண் கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர். [6] மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்” (தெலுங்கு), சமசுகிருதத்தில் “சிறீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி” (சமசுகிருதம்) “பஞ்சகீரண பௌதீகம்” (தமிழ்) போன்றவையாகும்.[7]