பூர்ணையா
From Wikipedia, the free encyclopedia
பூர்ணையா (Purnaiah) (1746 - 1812 மார்ச் 27) கிருட்டிணாச்சார்ய பூர்ணையா அல்லது மிர் மீரான் பூர்ணையா என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய நிர்வாகியும், அரசியல்வாதியும் மற்றும் மைசூர் அரசின் முதல் திவானும் ஆவார். இவருக்கு ஐதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் மூன்றாம் கிருட்டிணராச உடையார் ஆகிய மூன்று மன்னர்களின் கீழ் பணி புரியும் வாய்ப்பு இருந்தது. இவர் 1782 முதல் 1811 வரை மைசூர் அரசில் திவானாக ஆட்சி செய்தார். இவர் கணக்கியல், நினைவாற்றல் மற்றும் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். திப்பு சுல்தானின் கீழ் பணியாற்றும் போது போர்க்கால இராணுவத் தளபதியாகவும் இருந்தார். திப்பு சுல்தானின் தோல்விக்குப் பிறகு, மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1799 முதல் 1810 வரை பூர்ணையாவிடம் கல்வி கற்றார் .( இளவரசனின் மூன்று வயதில்). இவர் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆங்கில பிரநிதியுடன் மைசூர் அரசில் திவானாக ஆட்சி செய்தார்.
Mir Miran கிருட்டிணாச்சார்ய பூர்ணையா | |
---|---|
ஐரிசு ஓவியர் தாமசு இக்கி வரைந்த மைசூரின் திவான் பூர்ணையாவின் ஓவியம் | |
மைசூர் அரசின் முதல் திவான் | |
பதவியில் 1782 திசம்பர் – 1799 மே | |
ஆட்சியாளர்கள் | ஒன்பதாம் சாமராச உடையார் திப்பு சுல்தான் |
பதவியில் 1799 சூன் 30 – 1811 திசம்பர் 23 | |
ஆட்சியாளர் | மூன்றாம் கிருட்டிணராச உடையார் |
பின்னவர் | பார்கீர் பக்சி பாலாஜி ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொ.ச 1746 கோயம்புத்தூர் |
இறப்பு | 1812 மார்ச் 27 ஸ்ரீரங்கப்பட்டணம் |
வேலை | Administrator |