பூட்டானில் பௌத்தம்
From Wikipedia, the free encyclopedia
பூட்டானில் பௌத்தம், பூட்டான் நாட்டின் அரச சமயம் வச்சிரயான பௌத்தம் ஆகும். இந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பௌத்தர்களாகவும், ஒரு பங்கினர் இந்துக்களாகவும் உள்ளனர்.[1]
பூட்டான் நாட்டில் வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவான, திபெத்தியப் பௌத்தத்தை சில வேறுபாடுகளுடன், கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் மக்கள் பயில்கின்றனர். [2]
பௌத்தம் இந்நாட்டின் அரச சமயம் என்பதால், பௌத்த விகாரைகளுக்கும், வழிபாட்டிடங்களுக்கும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கும் பூட்டான் அரசு நிதியுதவிகள் வழங்குகிறது.
நவீன காலத்தில் பூட்டான் மன்னர் ஜிக்மே தோர்ஜி வாஞ்சுக், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட 10,000 கௌதம புத்தர் உருவச்சிலைகளை செய்து, பூட்டான் நாடு முழுவதும் நிறுவினார்.