பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
From Wikipedia, the free encyclopedia
பூஞ்ச் மாவட்டம், இந்தியா குறித்து அறிய, காண்க பூஞ்ச் மாவட்டம், இந்தியா.
பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை விளைவாக நடந்த முதலாம் இந்திய -பாகிஸ்தான் போரின் போது, காஷ்மீர் அரசிடமிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த ஆசாத் காஷ்மீரின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவலாகோட் நகரம் ஆகும். இம்மாவட்டம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மாவட்டமான பூஞ்ச் மாவட்டதின் ஒரு பகுதியாகும்.[1]
விரைவான உண்மைகள் பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான், நாடு ...
பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் | |
---|---|
மாவட்டம் | |
பூஞ்ச் | |
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த பூஞ்ச் மாவட்டப் பகுதிகளின் வரைபடம் | |
நாடு | பாகிஸ்தான் |
தலைமையிடம் | ராவலாகோட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 855 km2 (330 sq mi) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 4,59,000 |
• அடர்த்தி | 548/km2 (1,420/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
மூடு
இதன் தலைமையிடமாக ராவலாகோட் உள்ளது. இம்மாவட்டத்தில் சுதன் மற்றும் அவான் இன பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது.