பூஞ்ச் மாவட்டம், இந்தியா
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பூஞ்ச் மாவட்டம் (Poonch District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி சூழ்ந்து உள்ளது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாரமுல்லா மாவட்டம், பட்காம் மாவட்டம், குல்காம் மாவட்டம் மற்றும் ரஜௌரி மாவட்டம் சூழ்ந்துள்ளது. 1947ஆம் ஆண்டில் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது பூஞ்ச் மாவட்டத்தின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டது. எஞ்சிய பகுதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக உள்ளது. பூஞ்ச் நகரம் பூஞ்ச் மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. பூஞ்ச் மாவட்டம், மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து தரைவழியாக 497 கிலோ மீட்டர் தொலைவிலும், உதம்பூரிலிருந்து 291 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பூஞ்ச் மாவட்டம் இந்திய இராணுவத்தின் முக்கிய கேந்திரமாக உள்ளது. பூஞ்ச் மாவட்டம் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
பூஞ்ச் மாவட்டம், இந்தியா | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
தலைமையிடம் | பூஞ்ச் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 185101 |
தொலைபேசி குறியீடு | 911965 |
இணையதளம் | www |