பூங்கா நகர் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பூங்கா நகர் (Park Town) இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதியாகும்.ரிப்பன் கட்டிடத்தை அடுத்துள்ள மக்கள் பூங்காவினைக் கொண்டு இப்பகுதி "பூங்கா நகர்" என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் இது வெள்ளையர் நகர் (White Town) என அறியப்பட்டிருந்தது.
பூங்கா நகர் சென்னை புறநகர் இருப்புவழி, சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம், சென்னை மெட்ரோ ஆகிய இருப்புவழிகளின் சந்திப்பு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. தவிர நீள்தொலைவு இருப்புவழி முனையமான சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்துடன் இவற்றை இணைக்கிறது.[1][2]
பல முதன்மையான அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன.அவற்றில் சில: