புனேரி பகாதி
ஒரு வகை தலைப்பாகை / From Wikipedia, the free encyclopedia
புனேரி பகாதி (Puneri Pagadi) என்பது ஒரு தனித்துவமான வகை தலைப்பாகையாகும். புனே நகரத்தில் பெருமை மற்றும் கௌரவத்தின் அடையாளமாக இது கருதப்படுகிறது.[1] புனேயில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இத்தலைப்பாகை அறிமுகப்படுத்தப்பட்டது.[2] கவுரவ சின்னமாக இருந்தாலும், பல ஆண்டுகளாக தலைப்பாகையின் பயன்பாடு மாறி, தற்போது கல்லூரிகளில் பாரம்பரிய நாட்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[3] தலைப்பாகையின் அடையாளத்தைப் பாதுகாக்க, இதற்கு புவியியல் குறியீடு தகுதி வழங்க உள்ளூர் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.[3] அவர்களின் கோரிக்கை பின்னர் நிறைவேற்றப்பட்டது. புனேரி பகாதி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று அறிவுசார் சொத்து ஆனது.[1][3][4][5][6]