பிலிகிரிரங்கன் மலை
From Wikipedia, the free encyclopedia
பிலிகிரிரங்கனா மலை (Biligiriranga Hills) அல்லது பிலிகிரிரங்கன் மலை (உயிரியல் மற்றும் புவியியலில் குறிப்பிடப்படுகிறது [1]) என்பது தென்மேற்கு கருநாடகாவில், தென்னிந்தியாவில் தமிழ்நாடு (ஈரோடு மாவட்டம்) எல்லையில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடராகும். இப்பகுதி பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் வனவிலங்கு சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இது 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் இருப்பதால், இந்த சரணாலயம் இரு பகுதிகளுடனும் தாவர விலங்கினங்களின் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு, கருநாடக அரசாங்கத்தால் சனவரி 2011-ல் இந்த இடம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பிலிகிரிரங்கன் மலை, அமைவிடம் ...
பிலிகிரிரங்கன் மலை | |
---|---|
கொக்குபார வனச்சிகரம் & கொன்னேபாரே சிகரம் | |
நீலகிர் உயிர்க்கோள நிலப்படம், பல்வேறு பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் பிலிகிரிரங்கா சாமி கோயில் வனவிலங்கு காப்பகம் | |
அமைவிடம் | எல்லாந்தூர் வட்டம், சாமராசநகர் மாவட்டம், இந்தியா |
அருகாமை நகரம் | கொள்ளேகால் 30 கிலோமீட்டர்கள் (19 mi) |
ஆள்கூறுகள் | 11°59′38″N 77°8′26″E |
ஏற்றம் | 1707 மீ |
நிறுவப்பட்டது | 27 சூன் 1974 |
நிருவாக அமைப்பு | Karnataka Forest Department |
மூடு