பிரயாக்ராஜ்
From Wikipedia, the free encyclopedia
பிரயாக்ராஜ் (Prayagraj), அதிகாரப்பூர்வமாக பிரயாக்ராஜ் என அறியப்படுகிறது, இது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு மாநகராட்சி ஆகும். தற்போது இதன் புதிய பெயர் பிரயாக்ராஜ் ஆகும்.[6] அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும்.
பிரயாக்ராஜ்
அலகாபாத் | |
---|---|
பிரயாக்ராஜ் | |
அடைபெயர்(கள்): சங்கம நகரம்[1] மற்றும் பிரதமர்களின் நகரம்[2] | |
ஆள்கூறுகள்: 25°26′09″N 81°50′47″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | அலகாபாத் |
மாவட்டம் | அலகாபாத் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | அலகாபாத் மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | அபிலாசா குப்தா (பா.ஜ.க.) |
பரப்பளவு | |
• மொத்தம் | 365 km2 (141 sq mi) |
ஏற்றம் | 98 m (322 ft) |
மக்கள்தொகை (2020-2011 கலப்பு)[3] | |
• மொத்தம் | 15,36,218 |
• தரவரிசை | 36வது |
• அடர்த்தி | 4,200/km2 (11,000/sq mi) |
• மெட்ரோ தரவரிசை | 40வது |
இனம் | அலகாபாத்காரன் |
மொழி | |
• அலுவல் | இந்தி[4] |
• கூடுதல் அலுவல் | உருது[4] |
• பிராந்திய | அவதி[5] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 211001–211018 |
தொலைபேசி குறியீடு | +91-532 |
வாகனப் பதிவு | UP-70 |
பாலின விகிதம் | 852 ♀/1000♂ |
இணையதளம் | allahabadmc |
இந்நகரத்தில் இந்து சமய புனித ஆறுகளான யமுனை, கங்கை ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறு இங்கு திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் கலக்கிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் இங்கேயே அமைந்துள்ளது. ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் எனும் கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
திரிவேணி சங்கமத்தை ஒட்டி முகலாயப் பேரரசர் அக்பர் நிறுவிய அலகாபாத் கோட்டை உள்ளது. இந்நகரத்தில் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் நிறுவிய அலகாபாத் தூண் உள்ளது.