பாலாக்ணுமா அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
பாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace) ஐதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும். இது ஐதராபாத்தைச் சேர்ந்த பைகா குடும்பத்தினருக்கு சொந்தமாக இருந்தது, பின்னர் இதை அவர்களிடமிருந்து ஐதராபாத் நிசாம் வாங்கினார்.[1] 32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த அரண்மனை சார்மினாரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனைக் கட்டியவர் நவாப் விகார்-உல்-உம்ரா ஆவார். இவர் ஆறாவது நிசாமின் மாமாவும் நவாப் மிர் மஹபூப் அலி கான் பஹதூரின் சொந்தமும் ஆவார். [2]
பாலாக்ணுமா என்பதற்கு “வானத்தைப் போல” அல்லது “ஆகாயத்தின் பிம்பம்” என்று உருது மொழியில் பொருள்படும்.