பாலப் பேரரசு
இந்திய துணைக்கண்டத்தில் ஆரம்பகால இடைக்கால பேரரசு / From Wikipedia, the free encyclopedia
பாலப் பேரரசு (Pala Empire), தற்கால பிகார், மேற்கு வங்காளம், நேபாளம் & வங்காளதேசம் பகுதிகளை கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கும், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய அரசைக் குறிக்கும். பால (வங்காள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு |பின்னொட்டாகக் காணப்படும்.
இப்பேரரசை நிறுவிய கோபாலன் என்பவனே வங்காளத்தின் முதலாவது சுதந்திர அரசனாவான். இவன் கி.பி 750 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வந்தான். கி.பி 750 தொடக்கம் 770 வரை ஆட்சியில் இருந்த இவன் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினான். இவனுக்குப் பின்வந்த தர்மபாலன் (770-810), தேவபாலன் (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். சேன அரச மரபினரின் தாக்குதலைத் தொடர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் பாலப் பேரரசு நிலை குலைந்தது.
பாலர்கள், புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். இவர்கள் கன்னௌசி பகுதியைச் சேர்ந்த ககதவாலர்களுடன் திருமணத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் பல கோயில்களைக் கட்டியதுடன், நாளாந்தா, விக்கிரமசீலா முதலிய பல்கலைக் கழகங்களையும் ஆதரித்தனர். இவர்களுடைய மதமாற்றமே திபெத்தில் பௌத்தம் பரவுவதற்கு மூல காரணமாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது.