பாத்திமா அன்னை
From Wikipedia, the free encyclopedia
தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.[1] இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது.[2] பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ந்தேதி கொண்டாடப்படுகிறது,
விரைவான உண்மைகள் பாத்திமா அன்னை, இடம் ...
பாத்திமா அன்னை | |
---|---|
பாத்திமா அன்னை திருவுருவம், பாத்திமா நகர், போர்ச்சுக்கல் | |
இடம் | பாத்திமா, போர்ச்சுக்கல் |
தேதி | 13 மே — 13 அக்டோபர் 1917 |
சாட்சிகள் | லூசியா சான்டோஸ், ஜெசிந்தா மார்த்தோ, பிரான்சிஸ்கோ மார்த்தோ |
வகை | மரியாவின் காட்சிகள் |
கத்தோலிக்க ஏற்பு | 1930, திருத்தந்தை 11ம் பயஸ் காலம் |
ஆலயம் | பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமா, போர்ச்சுக்கல். |
மூடு