பாண்டுரங்க வாமன் காணே
சாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
முனைவர். பாண்டுரங்க வாமன் காணே (Dr. Pandurang Vaman Kane, மராத்தி: डॉ. पांडुरंग वामन काणे) (பிறப்பு : மே 7, 1880 - இறப்பு : மே 8, 1972) பரவலாக அறியப்பட்ட ஓர் இந்தியவியலாளரும் சமசுகிருத அறிஞரும் ஆவார். இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் சித்பவன் என்ற சிற்றூரில் பழமைவாத பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி புகழ்பெற்ற வரலாற்றாளர் பேராசிரியர் ராம் சரண் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்:
"சமசுகிருதத்தில் புலமை வாய்ந்த சமூக சீர்த்திருத்தவாதி பாண்டுரங்க வாமன் காணே பழங்கால கல்வி வழக்கங்களை தொடர்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இவரது "தர்மசாத்திரத்தின் வரலாறு" என்ற படைப்பு பழங்கால சமூக சட்டங்களையும் வழக்கங்களையும் தொகுத்த ஒரு கலைக்களஞ்சியமாகும். இது தொன்மை இந்தியாவின் சமூக செயல்பாடுகளை ஆய்வு செய்ய எமக்கு மிகவும் உதவியது"'[3].
மகாமகோபாத்தியாய பாண்டுரங்க வாமன கானே | |
---|---|
पांडुरंग वामन काणे | |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (நியமன உறுப்பினர்) | |
பதவியில் 16 நவம்பர் 1953[1] – 2 ஏப்ரல் 1964 | |
முன்னையவர் | அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் |
தொகுதி | நியமன உறுப்பினர் |
துணை வேந்தர், மும்பை பல்கலைக்கழகம் | |
பதவியில் 10 நவம்பர் 1947 – 9 நவம்பர் 1949 | |
முன்னையவர் | எம். சி. சாக்ளா |
பின்னவர் | நட்வர்லால் எச். பகவதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1880-05-07)7 மே 1880 இரத்தினகிரி மாவட்டம், பம்பாய் மாகாணம் |
இறப்பு | 18 ஏப்ரல் 1972(1972-04-18) (அகவை 91)[2] |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
விருதுகள் | பாரத ரத்னா (1963) சாகித்திய அகாதமி விருது (1956) |