பவுல் (திருத்தூதர்)
From Wikipedia, the free encyclopedia
புனித பவுல் (சின்னப்பர்) கிறிஸ்தவ புனிதராவார். இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்பட்டு வருகிறார்[1]
புனித பவுல் | |
---|---|
புனித பவுல் தமாஸ்கு நகரின் அனனியா வழியாய் பார்வையடைதல் 1631 ஆண்டு பியெர்த்ரோ கொர்டோனாவின் ஓவியம். | |
வேற்று இனத்தவரின் திருத்தூதர் | |
பிறப்பு | கிபி 9 சிசிலியாவின் தர்சு |
இறப்பு | கிபி 67 உரோம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவ பிறிவுகளும் |
முக்கிய திருத்தலங்கள் | மதிலுக்கு வெளியான பவுல் பசிலிக்கா உரோம் |
திருவிழா | சனவரி 25, ஜூன் 29, நவம்பர் 18 |