பழத் தோட்டம்
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
பழத் தோட்டம் (orchard) என்பது உணவு விளைச்சலுக்காக திட்டமிட்டு நடப்படும் மரங்கள் அல்லது செடிகளைக் குறிக்கும். பழத் தோட்டங்கள் பழ மரங்களாகவோ வித்து மரங்களாகவோ வணிக முறையில் நடப்படுகின்றன. பழத் தோட்டங்கள் பெருந்தோட்டங்களுக்கு இடையிலும் அமையலாம். அந்நிலையில் இவை உணவு தருவதோடு தோட்டத்துக்கு வனப்பையும் அளிக்கின்றன.[1] சில வணிகம் சாராத பழத் தோட்டத்தில் பழ மரங்களுக்குப் பதிலாக கொடிமுந்திரிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பெருபாலான மிதவெப்ப வட்டாரங்களில் இவை மேய்ந்த புல்வெளிப் பகுதிகளிலோ வெறும்மண் பகுதிகளிலோ கம்பிவேலி வலைகளுக்கு நடுவே நடப்படுகின்றன.
பெரும்பாலான பழத்தோட்டங்களில் ஒருவகை பழமரங்களே நடப்படுகின்றன. காட்டு மரநடவுகளில் உயிரியற்பன்மைக்கு முதன்மை இடம் தரப்படுகிறது. எனவே காடுகளில் பழமரங்களுக்கு ஊடாக இடையிடையே பிற மரங்களும் நடப்படுகின்றன. காடுகளில் மரபியற் பன்மை வாய்ந்த பழமரங்களுக்கு முதலிடம் தருதல் பூச்சிகளையும் நோய்களையும் தங்குதிரத்தை உருவாக்குகிறது.[2].
நீர்நிலைகள் காலநிலையைச் சீராக வைப்பதால் பழத்தோட்டங்கள் நீர்நிலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்படுகின்றன. நீர்நிலைகள் பூப்புக் காலத்தையும் பனிக்காலம் வரை நீடிக்க உதவுகின்றன.