பன்னிரண்டாவது இரவு
From Wikipedia, the free encyclopedia
பன்னிரண்டாவது இரவு (Twelfth Night, or What You Will, டுவல்த் நைட் அல்லது 'வாட் யு வில்' என்பது வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஒரு நகைச்சுவை நாடகமாகும்.[1] இந்நாடகமானது 1601-02 களில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு கப்பல் விபத்தில் பிரிக்கப்பட்ட வயோலா மற்றும் செபாஸ்டியன் ஆகிய இரட்டையர்களைச் சுற்றியே இக் கதை நகர்கிறது. வயோலா (மாறுவேடத்தில் பையனாகத் தோன்றுபவர்) டூக் ஆர்ஸினோவுடன் காதலில் விழுகிறார். ஆனால் டூக் ஆர்ஸினோவோ கவுண்டெஸ் ஒலிவியாவின் மீது காதல் கொள்கிறார்.கவுண்டெஸ் ஒலிவியாவோ வயோலாவைச் சந்தித்த பின் அவளை ஆண் என்று நினைத்துக் கொண்டு அவள் மீது காதல் வயப்படுகிறாள்.இந்நாடகத்தின் கதையானது பார்னெப் ரிச்சின் "அப்பல்லோனிஸ் மற்றும் சில்லா" என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நாடகமானது பிப்ரவரி 2,1602 ல் முதன் முதலாக கேன்டில் மாஸின் பொழுது அரங்கேற்றபட்டது. 1623 ம் ஆண்டு ஃபஸ்ட் ஃபோலியோவில் இடம் பெறும் வரை இந்நாடகம் வெளியிடப்படவில்லை.,[2]