பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்
From Wikipedia, the free encyclopedia
பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும். இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.[1] உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதமானோர்[2] திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் நோக்கமாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி, சமூகத்தின் சில அம்சங்கள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்; எதிர்மறை அணுகுமுறைகளைம் பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல்; திக்குவாய் நபர்கள் பதட்டமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த நிகழ்வுகளையும் பிரச்சாரங்களையும் நடத்துகின்றன.[3]
அறிவியல், அரசியல், தத்துவம், கலை, திரைப்படம், இசை ஆகிய துறைகளில் உலகில் தடம் பதித்த அல்லது பதித்துக் கொண்டிருக்கும் பல குறிப்பிடத்தக்க நபர்களையும் இந்நாள் கொண்டாடுகிறது.