பசுபதிநாத் கோவில்
From Wikipedia, the free encyclopedia
பசுபதிநாத் கோவில் (நேபாளி: पशुपतिनाथको मन्दिर) உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.
விரைவான உண்மைகள் பசுபதிநாத் கோவில், அமைவிடம் ...
பசுபதிநாத் கோவில் | |
---|---|
2020-ல் பசுபதிநாத் கோவில் | |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாகாணம்: | பாக்மதி பிராந்தியம் |
மாவட்டம்: | காத்மாண்டு, நேபாளம் |
அமைவு: | காத்மாண்டு |
அமைவு: | காத்மாண்டு |
ஆள்கூறுகள்: | 27°42′35″N 85°20′55″E |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | பாக்மதி ஆறு |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பகோடா |
மூடு
இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[1]
பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.