பக்தபூர் போர்
From Wikipedia, the free encyclopedia
பக்தபூர் போர் (Battle of Bhaktapur) காத்மாண்டு சமவெளியை, கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த இறுதிப்போர் ஆகும்[1]. 1769 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில் மல்லர் வம்சத்தின் காத்மாண்டு சமவெளியில் மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவால் தோற்கடிக்கப்பட்டார். காத்மாண்டு சமவெளியும், அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் சாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பக்தபூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
காத்மாண்டு சமவெளியை கோர்க்காலிகள் கைப்பற்றலின் ஒரு பகுதி | |||||||
1854ல் பக்தபூர் நகர சதுக்கம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேவாரிகள் | கோர்க்காலிகள் | ||||||
பலம் | |||||||
தெரியாது | 20,000 | ||||||
இழப்புகள் | |||||||
2,001 நபர்கள் 501 வீடுகள் | தெரியவில்லை |
பிரிதிவி நாராயண் சா பெற்ற வெற்றியில் நேபாளத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த நேவாரி அரசகுலத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து சா வம்சத்து ஆட்சி நிறுவப்பட்டது[2]. கலாச்சாரம் மற்றும் வர்த்தக நோக்கத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக ஆட்சிசெய்து கொண்டிருந்த நேவார்கள், நாட்டை விரிவுபடுத்தும் எண்ணமும் சூறையாடும் நோக்கமும் மிகுந்த கோர்க்காலிகளிடம் தோல்வியுற்றனர். தோல்வியுற்ற மன்னர் மல்லா நாடு கடத்தப்பட்டார்[3][4]