நோஸ்ராடாமஸ்
அழிவில்லா அரசன் / From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் (திசம்பர் 14, 1503 - சூலை 2, 1566), உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.
மைக்கேல் டி நோஸ்திரதாம் Michel de Nostredame | |
---|---|
பிறப்பு | 14 திசம்பர் / 21 திசம்பர் 1503 (யூலியின் நாள்காட்டி) செயின்ட்-ரேமி, பிரான்சு |
இறப்பு | 2 சூலை 1566(1566-07-02) (அகவை 62) சாலோன் மாகாணம், பிரான்சு |
பணி | மருத்துவர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், சோதிடர் |
அறியப்படுவது | கொள்ளை நோய்க்கு சிகிச்சை |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
கையொப்பம் |
நோஸ்ராடாமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார். இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.
நோஸ்ராடாமஸ் புகழ் பரவ ஆரம்பித்தது. கூடவே பிரச்சனைகளும். கத்தோலிக்கத் திருச்சபையின் பார்வையில் இவரின் ஆரூடங்கள் சாத்தானின் எச்சரிக்கைகளாகப் பட்டன. எனவே, நோஸ்ராடாமஸ் மீது திருச்சபையால் குற்றம் சுமத்தப்பட்டது. இப்பிரச்சனைகளால் நோஸ்ராடாமஸ் தலைமறைவானார்.நோஸ்ராடாமஸ் தனது செய்யுள்களைக் குழப்பமான கவிதை வடிவில் எழுதியமைக்கும் இதுவே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.