நைனித்தால்
From Wikipedia, the free encyclopedia
நைனிதால் (Nainital, pronounced [nɛnːtaːl] ) என்பது இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள குமாவுன் கோட்டத்தின், நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரம் மற்றும் மாவட்ட தலைமையகம் ஆகும். இது உத்தராகாண்ட மாநிலத்தின் நீதித்துறை தலைநகரமும் ஆகும். மாநிலத்தின் உயர் நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இதே பெயரிலான மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இந்த நகரில் மாநில ஆளுநர் வசிக்கும் ஆளுநர் மாளிகை உள்ளது. [7] நைனிதால் ஐக்கிய மாகாணங்களின் கோடைகால தலைநகராக இருந்தது. [8] .
நைனித்தால் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): குமாவோனின் ஆபரணம்[1] | |
ஆள்கூறுகள்: 29°23′31″N 79°27′15″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | குமாவுன் |
மாவட்டம் | நைனித்தால் |
பெயர்ச்சூட்டு | நைனித்தால் ஏரி |
அரசு | |
• வகை | மாநகர மன்றம் |
• நிர்வாகம் | நைனிதால் மாநகரட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.73 km2 (4.53 sq mi) |
ஏற்றம் | 2,084 m (6,837 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 41,377 |
• அடர்த்தி | 3,500/km2 (9,100/sq mi) |
இனம் | Nainitalites(English) Naintalwal (Kumaoni) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி[3] |
• அதிகாரப் பூர்வ துணை மொழி | சமசுகிருதம்[4][5] |
• பிராந்தியம் | Kumaoni[6] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 263001/263002 |
தொலைபேசி குறியீடு | +91 - 5942 |
வாகனப் பதிவு | UK-04 |
இணையதளம் | nainital |
நைனிதால் மாநில தலைநகரான தோராதூனில் இருந்து 345 km (214 mi) தொலைவிலும், இந்தியாவின் தலைநகரான புது தில்லிருந்து 285 km (177 mi) தொலைவிலும் இமயமலையின் குமாவுன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,938 மீட்டர்கள் (6,358 அடி) ) உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கண் வடிவ ஏரியைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த ஏரி தோராயமாக இரண்டு மைல் சுற்றளவு மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் மிக உயர்ந்த சிகரம் மேற்கில் உள்ள நைனா சிகரம் ( 2,615 m (8,579 அடி) ) ) ஆகும், மேற்கில் தியோபாதா சிகரம் ( 2,438 m (7,999 அடி) ), தெற்கில் ஆயர்பாதா சிகரம் ( 2,278 m (7,474 அடி) ) ஆகியவை உள்ளன. இந்த உயரமான சிகரங்களின் உச்சியில் இருந்து, "தெற்கே பரந்த சமவெளி அல்லது இமயமலையின் பெரும் பனிச் சரிவுகளைக் கொண்டு வடக்கே அமைந்துள்ள சிக்கலான முகடுகளின் அற்புதமான காட்சி அழகைக் காணலாம்." [9] இந்த மலைவாழிடம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.