நேவார் மக்கள்
From Wikipedia, the free encyclopedia
நேவார் மக்கள் அல்லது நேவா மக்கள் (Newar or Newah) நேபால் பாசா: नेवा:)[2] நேபாள நாட்டின் காட்மாண்டு சமவெளியில் வரலாற்றுக் காலம் முதல் வாழும் மக்கள் ஆவார்.[3] இந்தோ ஆரிய மக்களான நேவாரிகள் மற்றும் திபெத்தோ-பர்மிய மக்கள், தங்களுக்கென தனி மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருந்தனர். நேவாரி மொழி மற்றும் திபெத்தோ-பர்மிய மொழிகள் பேசிய நேவாரி மக்கள் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை கடைப்பிடித்தனர்.[4] பண்டைய பரத கண்டத்தின் இந்து சமயத்தவர்கள் போன்று, நேவார் இந்து சமய மக்களும், வர்ணாசிரம வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கின்றனர்.[5] நேவார் மக்கள், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் நாகரீகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வாழ்கின்றனர்.[6][7]
ஒரு நேவார் பெண் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,321,933[1] (நேபாள மக்கள் தொகையில் 5%) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
நேபாளம், இந்தியா | |
மொழி(கள்) | |
நேவார் மொழி, நேபால் பாசா | |
சமயங்கள் | |
நேபாள இந்து மற்றும் பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இந்தோ ஆரிய மக்கள் , திபெத்தோ-பர்மிய மக்கள், நேபாள் மண்டல மக்கள் |
வேத கால லிச்சாவி மற்றும் மல்ல நாட்டுப் பகுதிகளிலிருந்து நேபாளத்தின் காட்மாண்டு சமவெளிகளில் குடிபெயர்ந்த நேவாரி மக்கள் ஆரியர்களின் மொழியையும், பண்பாட்டையும் கொண்டிருந்தனர். [3] நேவாரிகள் ஆட்சி செய்த நேவார் மண்டலம், 1768இல் கோர்க்கா நாட்டவரால் வெல்லப்பட்டது.[8][9]