நுவான் சியா
From Wikipedia, the free encyclopedia
நுவான் சியா (Nuon Chea), சூலை 7, 1926)[3] – 4 ஆகத்து 2019)[4] சில நேரங்களில் லாங் புன்ருயாட் (Long Bunruot), கம்போடியாவின் முன்னாள் பொதுவுடமை அரசியல்வாதியும் கெமர் ரூச்சின் முன்னாள் முதன்மை கருத்தாளரும் ஆவார். 1975-1979 ஆண்டுக்காலத்தில் கம்போடியப் படுகொலை நடந்த போல் போட் ஆட்சியில் இரண்டாமிடத்தில் இருந்த இவர் பொதுவாக "உடன்பிறப்பு இரண்டு" என்று அறியப்பட்டார். நுவான் சியா இந்தப் படுகொலையில் பங்குபெற்றதற்காக ஐக்கிய நாடுகள் நடத்தும் குற்றவிசாரணையை எதிர்கொண்டார்.[5] 2014 ஆகத்து 7 இல் இவருக்கும், இவருடன் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்த கியூ சாம்பான் என்பவருக்கும் ஐக்கிய நாடுகள் நீதிமன்றம் ஆயுட்காலச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.[6]
விரைவான உண்மைகள் நுவான் சியா, கம்பூச்சியா மக்கள் பேரவையின் அமர்வுக்குழுத் தலைவர் ...
நுவான் சியா | |
---|---|
2013 இல் நுவான் சியா | |
கம்பூச்சியா மக்கள் பேரவையின் அமர்வுக்குழுத் தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 13, 1976 – சனவரி 7, 1979 | |
Deputy | கம்பூச்சியா மக்கள் பேரவையின் அமர்வுக்குழுத் துணைத்தலைவர் இங்குவான் காங் |
சனநாயக கம்பூச்சியாவின் பிரதமர் | |
பதவியில் செப்டம்பர் 27, 1976 – அக்டோபர் 25, 1976 | |
முன்னையவர் | போல் போட் |
பின்னவர் | போல் போட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1926-07-27)27 சூலை 1926 பட்டம்பங், பிரெஞ்சு இந்தோசீனா |
இறப்பு | 4 ஆகத்து 2019(2019-08-04) (அகவை 93) நோம் பென், கம்போடியா |
அரசியல் கட்சி | கம்பூச்சியா பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | லை கிம்செங்[1] |
பிள்ளைகள் | நுவான் சே,[2] மேலும் 2 பிள்ளைகள்[1] |
மூடு