நிர்மலா ஸ்ரீவஸ்தவா
From Wikipedia, the free encyclopedia
நிர்மலா ஸ்ரீவஸ்தவா (Nirmala Srivastava), ( 21 மார்ச்சு 1923 – 23 பெப்ரவரி 2011), "ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் "சகஜ யோகா" வை நிறுவியவர். இது ஒரு தியான வழிமுறையாகும். "உங்களைத் தோற்றுவித்த சக்தியுடன் இணைப்பு ஏற்பட்டால் தவிர, உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது," என்பது இவரின் கூற்றாகும். அவர், தன்னை முழுமையாக உணர்ந்தவர் என்றும், தனது வாழ்க்கையை அமைதி மற்றும் சமாதானம் பெற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்றும் கூறியுள்ளார். அவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக மக்கள் தன்நிலை அறியும் ஆற்றலைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.[1][2]
விரைவான உண்மைகள் நிர்மலா ஸ்ரீவஸ்தவா, பிறப்பு ...
நிர்மலா ஸ்ரீவஸ்தவா | |
---|---|
பிறப்பு | (1923-03-21)21 மார்ச்சு 1923 சின்தவாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 23 பெப்ரவரி 2011(2011-02-23) (அகவை 87) செனோவா, இத்தாலி |
அறியப்படுவது | சகஜ யோகா |
வலைத்தளம் | |
http://www.sahajayoga.org/ |
மூடு