நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்
From Wikipedia, the free encyclopedia
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் 'Fourth Anglo–Mysore War) மைசூர் இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது. [1] இது ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் நான்காவதும், இறுதியானதும் ஆகும்.
நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் பகுதி | |||||||
போருக்குப் பின் திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் பகுதிகளை எதிரிகளால் பங்கிட்டப் பகுதிகளை காட்டும் வரைபடம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மைசூர் இராச்சியம் ஆற்காடு நவாப் முகலாயப் பேரரசு | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ஐதராபாத் நிசாம் |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
திப்பு சுல்தான் † மீர் குலாம் உசைன் முகமது ஹுல்லீன் மீர் மீரான் உம்மத் உல் உம்ரா மீர் சாதிக் குலாம் முகமது கான் | ஜார்ஜ் ஹாரிஸ் நிஜாம் அலி கான் மேஜர் டேவிட் பெயர்டு தளபதி ஜேம்ஸ் ஸ்டூவர்ட் |
நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். சீரங்கப்பட்டிண முற்றுகையின் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார்களின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மைசூர் இராச்சியம், பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, பிரித்தானியர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டிக் கொண்டு, பிரித்தானியர்களுக்கு அடங்கிய சுதேசி அரசாக மாறியது.