தோட்டக்கலை
தோட்டம் சார் பயிர்களை வளர்க்கும் கலை / From Wikipedia, the free encyclopedia
தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் நறுமணப் பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வுகொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.
சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு வரை அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம். சிலவகைச் சிறப்புத் தோட்டங்களில் ஒரேவகைத் தாவரம் மட்டுமே அமையும். இன்னௌஞ் சிலவற்ரில் பலவகைத் தாவரங்களமிடையிடையில் கலந்து வளர்க்கப்படலாம். தோட்ட வளர்ப்பு கடின உழப்பினை வேண்டுகிறது, அழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது ஈவை பண்ணைகள், காடுகளைவிட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.