தொழு நோய்
From Wikipedia, the free encyclopedia
தொழு நோய் (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, மைக்கோபாக்டீரியம் இலெப்ரே[8] என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
தொழு நோய் | |
---|---|
ஒத்தசொற்கள் | ஹேன்சன் நோய் (HD)[1] |
மார்பு மற்றும் வயிற்றில் தொழுநோயால் ஏற்படும் சொறி | |
பலுக்கல் | |
சிறப்பு | தொற்று நோய் |
அறிகுறிகள் | வலியை உணரும் திறன் குறைதல்[3] |
காரணங்கள் | மைக்கோபாக்டீரியம் இலெப்ரே அல்லது மைக்கோபேக்டீரியம் இலெப்புரோமட்டோசிசு[4][5] |
சூழிடர் காரணிகள் | தொழுநோயாளியுடன் நெருங்கிய தொடர்பு, வறுமையில் வாழ்வது[3][6] |
சிகிச்சை | பல மருந்து சிகிச்சை[4] |
மருந்து | ரிஃபாம்பிசின், டாப்சோன், க்ளோஃபாசிமைன்[3] |
நிகழும் வீதம் | 209,000 (2018)[7] |
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.