தே தேயும்
மிகப்பழைய கிறித்தவ திருப்புகழ் பாடல் / From Wikipedia, the free encyclopedia
தே தேயும் அல்லது திருச்சபையின் நன்றி கீதம் (இலத்தீன்: Te Deum laudamus; ஆங்கில மொழி: Thee, O God, we praise) என்பது மிகப்பழைய கத்தோலிக்க கிறித்தவப் பாடல் ஒன்றைக்குறிக்கும். இது கத்தோலிக்க திருச்சபையில் அதன் திருப்புகழ்மாலையின் போதும், கடவுளுக்கு நன்றி கூறும் தருணங்களான புதிய திருத்தந்தை தேர்வாகும் போதோ, ஆயர் அருட்பொழிவுவின் போதோ, புனிதர் பட்டமளிப்பு நிகழ்வின் போதோ, துறவற வார்த்தைப்பாட்டின் போதோ, அமைதி உடண்படிக்கை ஏற்படும் போதோ பாடப்படும். இது குறிப்பாக திருப்பலியின் முடிவிலோ அல்லது வழிபாட்டின் முடிவிலோ பாடப்படும்.[1] இது பாடப்படும் போது, ஆலய மணிகள் ஒலிப்பது வழக்கம். இப்பாடல் ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. திருவருகைக் காலம், தவக் காலம், and பாஸ்கா முப்பெரும் நாட்கள் ஆகிய நாட்களில் இப்பாடல் பாடுவதில்லை[2] இதனை வெளிப்படையாக இறைமக்களோடு சேர்ந்து ஆண்டு நிறைவு நாளில் பாடுபவர்களுக்கு நிறைவுப் பலன் உண்டு.[3]
இப்பாடலுக்கு ஹேடன், மோட்சார்ட், வேர்டி, டுவோராக், ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் முதலிய பலர் இசையமைத்துள்ளனர்.