தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு
From Wikipedia, the free encyclopedia
தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு-நாகாவானது (National Advisory Committee for Aeronautics-NACA) ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையாட்கள் புதிதாக நிறுவப்பட்ட தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா அமைப்புக்கு மாற்றப்பட்டனர். இவ்வமைப்பின் ஆராய்ச்சியில் வடிவமைக்கப்பட்ட நாகா காற்றிதழ்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
மூடு