தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு
தென்கிழக்கு ஆசியாவின் முன்னாள் சர்வதேச ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு ( Southeast Asia Treaty Organization (SEATO) (சியோடா) என்பது தென்கிழக்காசியாவின் கூட்டுப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இது தென்கிழக்கு ஆசியா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது மணிலா ஒப்பந்தம், என்ற பெயரில் உருவாக்கப்பட்டு பிலிப்பீன்சு தலைநகரான மணிலாவில் 1954 செப்டம்பரில் கையொப்பமானது. 1955 பெப்ரவரி 19 அன்று தாய்லாந்தின் பேங்காக்கில் நடந்த கூட்டத்தில் இந்த அமைப்பு முறையாக நிறுவப்பட்டது.[1] இந்த அமைப்பின் தலைமையகம் பாங்காக்கில் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் எட்டு உறுப்பு நாடுகள் இணைந்தன.
சியாட்டோவின் கொடி | |
சியாட்டோ உறுப்பு நாடுகள் நீல திறத்தில் காட்டப்பட்டுள்ளன. | |
சுருக்கம் | SEATO |
---|---|
உருவாக்கம் | 1954 செப்டம்பர் 8 |
வகை | பன்னாட்டு இராணுவக் கூட்டணி |
தலைமையகம் | தாய்லாந்து, பாங்காக் |
சேவை பகுதி | தென்கிழக்காசியா |
உறுப்பினர்கள் | 8 நாடுகள் States protected by SEATO 2 nations
|
இது முதன்மையாக தென்கிழக்கு ஆசியாவில் பொதுவுடமைத் தத்துவத்தின் ஆதிக்கத்தின் பரவுவலைத் தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு பொதுவாக ஒரு தோல்வியுற்ற அமைப்பாக கருதப்படுகிறது, ஏனென்றால் உள்நாட்டு மோதல் மற்றும் சர்ச்சைகளானது சியாடோ இராணுவத்தின் பொதுப் பயன்பாட்டை தடுத்தது; எவ்வாறாயினும், சியாடோவால் நிதியளிக்கப்பட்ட கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்கள் தென்கிழக்கு ஆசியாவில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தின. பல உறுப்பு நாடுகள் ஆர்வத்தை இழந்து, பின்வாங்கியதால் 1977 சூன் 30 இல் சியாடோ கலைக்கப்பட்டது.