துறைமுகப்பட்டினம்
From Wikipedia, the free encyclopedia
துறைமுகப்பட்டினம் (Port) என்பது கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவும் மக்கள் அல்லது சரக்குகளை துறைமுகத்திலிருந்து நிலத்திற்கு கொண்டுசெல்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் கடற்கரை அல்லது கரையில் உள்ள இடவமைப்பாகும். துறைமுகப்பட்டினத்தின் இடவமைப்புகள் வர்த்தகரீதியான தேவைகளுக்கும், காற்று மற்றும் அலைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காகவும், நிலம் மற்றும் பயணிக்கக்கூடிய நீர்நிலைக்கான அணுகலை சுலபமாக்கும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றன. ஆழமான நீர்நிலையுள்ள துறைமுகப்பட்டினங்கள் அரிதானவையாக இருந்தாலும், அவை பெரிய கப்பல்களை மிகவும் சிக்கனமாகக் கையாளக்கூடியவையாக உள்ளன. வரலாறு நெடுகிலும் துறைமுகங்கள் எல்லாவகையான போக்குவரத்தையும் கையாண்டிருக்கின்றன என்பதால் உதவி மற்றும் சேமிப்பக வசதிகள் பரவலான அளவிற்கு மாறுபடுகின்றன. இவை பல மைல்களுக்கு நீட்டிக்கப்படக்கூடியவை என்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றன.[1][2] சில துறைமுகப்பட்டினங்கள் நேரடியான இராணுவப் பங்களிப்பிற்கென்றே முக்கியத்துவம் பெறுகின்றன.